திருமலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெற்ற உறியடி உற்சவம்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி திருமலையில் உள்ள கோகர்பம் அனை எதிரே இருக்கும் காலிங்க நர்த்தன பூங்காவில் இருக்கும் காலிங்க நர்த்தன கிருஷ்ணருக்கு தோட்டத் துறையின் சார்பில் பால், தயிர், இளநீர்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நடந்த உறியடி திருவிழாவில் இளைஞர்கள் பங்கேற்று உறியடித்து பரிசுப் பொருட்களை பெற்றனர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் இந்நிகழ்ச்சியில் தோட்டத் துறை இணை இயக்குநர் சீனிவாசலு, அலுவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர்கள் உள்ளூர் இளைஞர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


