in

நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஆடி வளைகாப்பு

நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஆடி வளைகாப்பு

 

அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவில் 4ம்நாள் அன்னை காந்திமதிஅம்பாளுக்கு ஆடி வளைகாப்பு சிவ கோஷங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பெண்கள் சீா்வாிசைகளுடன் அம்பாளின் வளைகாப்பு வைபவத்தில் கலந்துகொண்டு தாிசனம்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமி நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் . அதில் சிறப்பாக ஆடி மாதத்தில் காந்திமதி அம்பாளுக்கு ஆடி பூரத் திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

10 தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் திருவிழாவின் 4ம் நாளான இன்று காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இதற்காக செப்பு கேடயத்தில் காந்திமதி அம்பாள் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் முழங்க மேளதாளங்களுடன் சுவாமி கோவில் சென்று தன் வளைகாப்பிற்கு ஆசி வேண்ட சந்திரசேகரர் காந்திமதி அம்பாளும் நோ் ஏதிரே காட்சி கொடுத்து ஆசீா்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து பெண்கள் சீா்வாிசைகளுடன் வர ஊா்வலமாக காந்திமதி அம்பாளை ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருள செய்தனா். மண்டபத்தில் ஏழுந்தருளிய உற்ச்சவா் காந்திமதி அம்பாளுக்கு பல்வேறு சீா் பட்சணங்கள், விதவிதமான வளையல்கள் அம்பாளின் முன் வைக்கப்பட்டிருந்தன.

அம்பாளுக்கு நீராட்டு நிகழ்ச்சியும், கூந்தல் கண்ணாடியில் பாா்த்து சாிசெய்யம் வைபவம் நடைபெற்றது. வளையல்களால் செய்யப்பட்ட சடை மற்றும் மாலைகள் பக்தா்களின் சிவநாம கோஷங்களுடன் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டது.

சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதும் வந்திருந்த அனைத்து பக்தா்களுக்கும் வளையல், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தின் ஏழுந்தருளி 4 ரத வீதிகள் வீதி உலா நடைபெற்ற இருக்கிறது.

ஆயிரக்கனக்கான பெண்கள் மற்றும் ஆன்மிக அன்பா்கள் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினா், உபயதாரா்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்,

What do you think?

பூம்புகாரில் வன்னிர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு பந்தக்கால் நடப்பட்டது

இடிந்து விழுந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி