பண்ருட்டி அருகே பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் அடுத்த தட்டாம்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்தையொட்டி காலையில் மங்கல இசையுடன் தொடங்கிய விழா.

கணபதி பூஜை கோபூஜை. தொடர்ந்து
மகா தீபாராதனை நடைபெற்று.பின்னர் யாக சாலையிலிருந்து
கடம் புறப்பாடாகி விமானம் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு
மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர் அதை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பண்ருட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


