கிரகணம் முடிந்து ஏழுமலையான் கோவில் நடை மீண்டும் திறப்பு
காலை 6 மணி முதல் சாமி கும்பிட பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி.
நேற்று இரவு மணி 9:.50 துவங்கிய சந்திர கிரகணம் இன்று அதிகாலை மணி 1:31 முடிந்தது.

கிரகணத்தை முன்னிட்டு நேற்று மாலை 3:30 மணிக்கு ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் கிரகணம் முடிந்த பின் இன்று காலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து சாஸ்திர ரீதியில் கோவில் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுப்ரபாத சேவை தோமாலை சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை நடத்தப்பட்டு காலை 6 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட உள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு சுமார் 12 மணி நேரம் ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு மீண்டும் திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படும்.
நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லட்டு பிரசாத உற்பத்தி மீண்டும் துவங்கி உள்ளது.


