in

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

 

கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.

கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகும். இங்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிக்கட்டுகளாக அமைந்த கட்டு மலைக் கோயிலாகும் இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம்.

மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமியே நீ என்றும் சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 7 ஆம் தேதி காலை தன்னைத்தானே பூஜித்தலும் இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடனும், தேரில் எழுந்தருளினர். மங்கள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். நாளை 10ம் நாளான காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, மற்றும் பணியாளர்கள் நிர்வாகிகள் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

What do you think?

எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 71 கிலோ பிரம்மாண்ட கேக்

கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் தேரோட்டம்