in

இரட்டணை அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவம்

இரட்டணை அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஊஞ்சல் உற்சவம்

 

திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு பச்சைபட்டு உடுத்தி வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வெண்ணியம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு சிறிய தேரில் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த வெண்ணியம்மனுக்கு கும்ப தீபம், அடுக்கு தீபம், பஞ்சமுக தீபாதாரணை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் ஆகியவை காண்பிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இரட்டணை கிராம தேவதைகள் அறக்கட்டளை மற்றும் திண்டிவனம் சாமிக்கண்ணு பூக்கடை & சன்ஸ் செய்திருந்தனர்.

What do you think?

குற்றாலம் திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசு திருவிழா

ஆஞ்சநேயர் கோயிலில் அன்புமணி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை