in

இரட்டணை ஸ்ரீ திரௌபதி ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா

இரட்டணை ஸ்ரீ திரௌபதி ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழா

 

இரட்டணை ஸ்ரீ திரௌபதி ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழாவில் கவுரவர்களில் மூத்தவரான துரியோதனன் நேற்று நடந்த 18ம் நாள் குருஷேத்திர போரில், பீமசேனனால் வீழ்த்தப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த மகோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 30-06-2025 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

மேலும் முதல் நாளிலிருந்து மகாபாரத சொற்பொழிவு தெருக்கூத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது., தொடர்ந்து ஜலக்கிரிடை, திரௌபதி அம்மன் திருமணம், அரசசுனன் தபசு, விராட பருவம், ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் இன்று காலை அரவான் பலி மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சபாண்டவர்கள் உடனான குருஷேத்திர போரில் தன் சகோதரர்கள் 99 பேரையும் இழந்த துரியோதனன், இன்று காலை, தானே களத்தில் இறங்கி போரிட்டார் நீண்ட யுத்தத்திற்கு பின், பீமசேனன், துரியோதனனை கொன்றார்.

கவுரவர்கள் சபையில் துரியோதனனால், அவமானப்படுத்தப்பட்ட திரவுபதியம்மன். துரியோதனன் குருதியை எடுத்து தன் கூந்தலில் தடவி சபதத்தை நிறைவேற்றினார். அதே நேரம் தன் மூத்த மகனை இழந்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை அவேசமாக அடித்து விரட்டினார் புத்திர சோகத்தில் அழுது புலம்பினார் தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர்.

தொடர்ந்து மாலை ஐந்து மணி அளவில் இரட்டணை குளக்கரை சென்று பூங்கரகம் ஜோடித்து விரதம் இருந்த பக்தர்களுடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்து அடைந்தனர். தொடர்ந்து சக்தி கரகம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு தீ மிதித்திடலை வந்து அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு மடி சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் சக்தி கரகம் முதலில் தீ குண்டத்தில் இறங்க தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் தீக்குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீக்குள்ளத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் இரட்டணை சுற்றுவட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

ஸ்ரீ திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத தேய்பிறை பைரவஷ்டமி யாகம்

மீனவர்களின் அனைத்து குறைகளும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் நிவர்த்தி செய்யப்படும் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு