பரமத்தி வேலூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம்
நாமக்கல் பரமத்தி வேலூர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை யினை முன்னிட்டு காலை மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு முன்பு உள்ள மகாமேருக்கு பலவகை வாசனை திரவியங்களினால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு நிறைவாக கலச அபிஷேகம் செய்து மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நாமாவளிகள் கூறி உதிரிப்பூ அர்ச்சனை செய்து அடுக்காரத்தி, கும்ப ஆரத்தி, ஏகாரத்தி, பஞ்சாரத்தி உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடை, சாமரம், விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களினால் உபச்சாரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.


