in

நிலவில் மனிதர்களை அனுப்புவது மிகப்பெரிய திட்டம்

நிலவில் மனிதர்களை அனுப்புவது மிகப்பெரிய திட்டம்

 

நிலவில் மனிதர்களை அனுப்புவது மிகப்பெரிய திட்டம் – 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படும் என இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் பேட்டி

தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பங்கேற்று பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்து கௌரவித்தார் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன் கூறும்போது

சந்திராயன்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலமாக தூக்கம் இன்றி கடுமையாக உழைத்து 8 மாதங்களில் செய்கின்ற பணியை 1 மாதத்தில் முடித்து பின் சந்திரயான் 3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.

சந்திராயன் – 4 திட்டம் 9600 கிலோ கிராம் எடை கொண்டது. சந்திரன் 3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது ஆனால் சந்திராயன் -4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று சாம்பில்களை எடுத்துகொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கபட்டுள்து அதற்க்கான பணிகளில் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் சந்திராயன் 5 திட்டம், சந்திராயன் 3 போல் ஒரு லேண்டர் இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது.

நிலவில் மனிதர்களை அனுப்புவது பெரிய திட்டம் 2040 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் நடைபெறும் அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதள மையம் ஶ்ரீ ஹரிஹோட்டாவில் அமைக்க உள்ளோம்

இரண்டாவது ஏவு தளம் மையம் குலசேகரபட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்தார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் நாடார் சரஸ்வதி கல்வி குழுமங்களின் நிர்வாகிகள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

What do you think?

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்

 பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் திருக்கல்யாண வைபவம்