in

கொட்டும் மழையில் மூவர்ண கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை

கொட்டும் மழையில் மூவர்ண கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை

 

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் சுகுமார் கொட்டும் மழையில் மூவர்ண கொடியேற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

10 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அரசுதுறை மற்றும் தன்னார்வலர்கள் 425 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

நாட்டின் 79 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.இதில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு கொட்டும் மழையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடன் திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். முன்னதாக மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட 4 அரசு துறைகள் சார்ந்த 10 பயனாளிகளுக்கு கீழ் 20 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை.

தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக மேடையில் வைத்து வழங்கினார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் என 425 பேருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகாராணா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் சந்தோஸ்ஹதிமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ஜான்வி கபூர்

79வது சுதந்திர தினத்தை மேயர் தேசிய கொடி ஏற்றி மரியாதை