in

கவின் உடலுக்கு அமைச்சர் கே என் நேரு நேரில் அஞ்சலி

கவின் உடலுக்கு அமைச்சர் கே என் நேரு நேரில் அஞ்சலி

 

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலையாளியின் போலீஸ் தந்தை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஐந்து நாள் போராட்டத்தை கைவிட்டு குடும்பத்தினர் உடலை பெற்று சென்றனர் கவின் உடலுக்கு அமைச்சர் கே என் நேரு நேரில் அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ்சும் (27) நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த போலீஸ் தம்பதிகளான சரவணன் கிருஷ்ணகுமாரி ஆகியோரது மகள் சுபாஷினி என்பவரும் காதலித்து வந்தனர்.

பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கடந்த 27ஆம் தேதி கேடிசி நகரில் சுபாஷினி பணிபுரியும் சித்த மருத்துவமனைக்கு வந்தபோது சுபாஷினியின் சகோதரரான சுர்ஜித் பட்டப் பகலில் கவினை வெட்டி கொலை செய்தார்.

நெல்லையில் நடைபெற்ற இந்த ஆணவ படுகொலை தமிழகத்தை உலுக்கியது கொலை நடைபெற்ற அன்றே சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சுர்ஜித் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் கிருஷ்ணகுமாரி இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என கவின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர் முதல் கட்டமாக முதல் தகவல் அறிக்கையில் பெற்றோர்கள் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களை கைது செய்யக்கோரி கடந்த ஐந்து நாட்களாக கவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது இதற்கிடையில் நேற்று முன்தினம் சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார் இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நேற்று அவர்கள் விசாரணையை தொடங்கினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கேஎன் நேரு அணிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆறுமுகமங்கலத்தில் கவின் வீட்டிற்கு சென்று குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதேபோல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக அமைப்புகளும் கவினுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல் திருமாவளவன் நெல்லையில் போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையில் அரசின் தொடர் பேச்சுவார்த்தை காரணமாகவும் சுபாஷினியின் தந்தை கைது செய்யப்பட்டதாலும் கவின் உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர் அதன்படி இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் உடற்கூறாய்வு செய்து வைக்கப்பட்டிருந்த கவின் உடல் இன்று அவரது தந்தையான சந்திரசேகர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக கவின் உடலுக்கு அமைச்சர் கே என் நேரு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் நேரில் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து கவின் உடல் அவரது சொந்த ஊரான ஆறுமுக மங்கலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.

இதையொட்டி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சுற்றி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது கவின் படுகொலை கடந்த ஐந்து நாட்களாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்கச் செய்தது சுபாஷினி குறித்தும் கவின் குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சுபாஷினி நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார் அதில் நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் ஆனால் பெற்றோரிடம் சொல்லவில்லை எனவே இந்த கொலைக்கும் பெற்றோருக்கும் சம்பந்தமில்லை எங்களை விட்டு விடுங்கள் என்று வேதனையோடு தெரிவித்து இருந்தார்.

இது போன்ற சூழ்நிலையில் கவின் உடல் பெற்றுக் கொள்ளப்பட்டதால் கவின் உறவினர்களின் 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

What do you think?

தேனியில் ஸ்ரீ பெருமிழலை குடும்பா நாயனாருக்கு 1160 ஆம் ஆண்டு வழிபாட்டு பூஜை

மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்