in

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் 16 லட்சம் மதிப்பீட்டில் ஈம சடங்கு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் 16 லட்சம் மதிப்பீட்டில் ஈம சடங்கு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை 6 வது வார்டுக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் அருகில்

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் ஈம சடங்கு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு 6வது வார்டு உறுப்பினர் ரிஷி தலைமை வகித்தார்.நகர் மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கலந்து கொண்டு ஈம சடங்கு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ்,காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

திருக்கோவிலில் ராஜகோபுரத்திற்கு தீபம் ஏற்றி பாஜகவினர் கொண்டாடி வழிபாடு.

உங்களது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள்