மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா
தேவாரப் பாடல்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் லட்ச தீப திருவிழா திருவாவடுதுறை ஆதீன உள்ளிட்டோர் பங்கேற்பு, நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது இங்கு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு 39 ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது தொடர்ந்து சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றினர் சுவாமி உருவங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் ஏற்றப்பட்டன.

திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி குத்துவிளக்கேற்றி லட்ச தீபத்தை துவக்கி வைத்தார் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


