தரங்கம்பாடியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை நேற்று மாலையிலிருந்து மழையின்றி காணப்பட்ட நிலையில் மதியம் முதல் பலத்த இடியுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பொறையார், திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து மழையின்றி காணப்பட்டு வந்த நிலையில் தற்போது தரங்கம்பாடி தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கன மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


