மின்சாரத் துறையில் கேங்மேன் பணியாளரை கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும் என மின் துறை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் மின்சாரத்துறை மேற் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மாபேட்டையில் மின் துறையில் பணிபுரிந்த கேங்மேன் ராஜேஷ் என்பவரை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேங்மேன் பணியாளரை கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சாரத் துறை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


