ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசன்னாக முடிசூடிய 1040 வது ஆண்டு நிறைவு விழா
ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி ராஜராஜ சோழன் பேரரசன்னாக முடிசூடிய 1040 வது ஆண்டு நிறைவு விழா மிக விமர்சையாக நடராஜர் கோவிலில் கொண்டாடப்பட்டது, பிச்சாவரம் பாளையக்காரர் மன்னர்மன்னன் சூரப்ப சோழனார் தலைமையேற்று நடத்தினார்.
“சோழ பேரரசர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுத்து சிறப்பித்த சோழ வாரிசுகள்.

சோழர் குல நாயகன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடிப்பூரம் தினத்தை ஒட்டி க்ஷத்திரிய சிகாமணி ராஜராஜ சோழன் பேரரசனாக முடிசூடிய 1040 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை சோழர்களின் நேரடி வாரிசுகளான பிச்சாவரம் பாளையக்காரர் மன்னர் மன்னன் சூரப்ப சோழனார் தலைமை ஏற்று நடத்தினார்.
விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழனின் திருவுருவ படம் நடராஜர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் முகப்பு வாயிலிருந்து சிவ வாத்தியங்கள் முழங்க சிலம்பாட்டம் ஆடியபடி ஊர்வலமாக தில்லை காளியம்மன் கோவில் வரை வீதியுலாவாக கொண்டு வரப்பட்டதுடன், தில்லை காளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு நிறைவுற்றது.

முன்னதாக நேற்று ஆடி திருவாதிரையில் அவதரித்த மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவினை ஒட்டி தில்லை காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இரண்டு பேரரசர்களுக்கு விழா நடத்தி சிறப்பு செய்துள்ளனர்.


