in

பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி

பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி

 

பிளாஸ்டிக் பை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார பேரணி, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் 300க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.

பிளாஸ்டிக் பைல்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணைந்து நடத்திய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியானது நகராட்சி பூங்காவில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நகராட்சி பூங்காவில் நிறைவு பெற்றது.

இப்பேரணியில் 300க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மஞ்சள் பை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

What do you think?

பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை நிகும்பலா யாகம்

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம்