விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் அரசியல் அதிகாரமும் குறித்து கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் பட்டியலின மக்களின் பாதுகாப்பும் அரசியல் அதிகாரமும் குறித்து கொள்கை விளக்க மாவட்ட பொதுக்கூட்டம் பழைய மீன் மார்க்கெட் அருகில் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் சந்திரன், மாநில செயலாளர்கள் தை சேகர், உத்திராபதி, மாநில அமைப்பு செயலாளர்கள் சுரேஷ், தங்க முருகன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் நிறுவன தலைவர் குடந்தை அரசன் கலந்து கொண்டு பேசுகையில் பட்டியலின மக்களின் பாதுகாப்பு குறித்து தமிழகத்தில் கடும் கவலை நிலவுகிறது.
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கொடூரங்கள் நடைபெறுவதாக வேங்கைவயலில் பட்டியலின மக்களின் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம், நாங்குநேரி கொடூரம், இடைக்காட்டூர் தாக்குதல் என திமுக அரசின் முகத்திரை நாளுக்கு நாள் கிழிந்து கொண்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர் கட்சி குற்றம் சாட்டுகிறது. பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளில் தமிழகம் முன்னிலை வகிப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நேர்ந்த அவமானம் என அதிமுக தெரிவித்துள்ளது.
பட்டியலின மக்களின் பாதுகாப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை எதிராக சட்டங்கள் உள்ளன, ஆனால் அவை போதுமானதாக இல்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு தேவை.
தமிழகத்தில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் அனைவரின் கடமை என்று. பேசினார்.

