in

கோவையில் சாமி சிலை கண் திறந்ததாக பக்தர்கள் குவிந்தனர் !!!

கோவையில் சாமி சிலை கண் திறந்ததாக பக்தர்கள் குவிந்தனர் !!!

 

கோவை டவுண்ஹால், NH சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இதனால் இந்த ஆலயம் கோவை மக்கள் இடையே மிகவும் பிரபலமான ஆலயமாக திகழ்கிறது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஆலயத்தின் பூசாரி அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் செய்து வந்துள்ளார்.

அப்போது அங்கே வந்த ஒரு பெண்பக்தர் அம்மனின் சிலையில் வலதுபுறம் உள்ள கண் திறந்து இருப்பதை பார்த்து பூசாரியிடம் தெரிவித்து உள்ளார்.

அதற்குள் இந்த தகவல் காட்டுதீபோல் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிக அளவில் பெண் பக்தர்கள் குவிந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

கோவையில் அம்மன் சிலை கண் திறந்ததாக கோவையில் பரவிய செய்தியால் இந்த ஆலயத்திற்கு காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சென்னை மற்றும் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்