ஜனநாயகத்தின் ஆணவப் பேச்சு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரையில் 10 தொகுதியில் எடப்பாடியார் எழுச்சி பயணத்தை மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்கிறார்கள்.
2026 ஆண்டில் முதலமைச்சர் அறிவாலயத்தில் இருந்து தான் வருவார் என சொல்வது ஜனநாயகத்தின் ஆணவப் பேச்சு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
மதுரை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வருகிற 1ம் தேதி முதல்
4 ம் தேதி முதல் மதுரையில் உள்ள 10 தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார், இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு ஆகியோர் கூட்டாக சேர்ந்து தேவையான பாதுகாப்பு மற்றும் அனுமதி தொடர்பாக மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் இதுவரை 110 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள், இந்த எழுச்சி பயணத்தில் தங்கள் வீட்டுப் பிள்ளையை போல மக்கள் வரவேற்று வருவதை மதுரை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து உளளார்கள் இனி நேரடியாக அவரை வரவேற்க தயாராகி விட்டனர்.
மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் ஒரு திருப்புமுனையாக அமையும், எழுச்சி பயணம் என்ற வைர கிரீடத்தில் முத்திரை பதித்தது போல மதுரை மாவட்டத்தில் அமையும். மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள் என அனைத்து தர மக்களும் வரவேற்பு அளிக்க உள்ளார்கள். ஒவ்வொரு தொகுதிலும் ஒரு லட்சம் வாக்காளர்கள் திரள உள்ளனர் இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் வருகின்ற வாகனங்களுக்கும் தேவையான இட வசதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடியார் செய்துள்ளார், மதுரைக்கு 40 ஆண்டுகள் குடிநீர் பஞ்சம் வராத வகையில் 1,292 கோடி அளவில் குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் தொடங்கி வைத்தார் இந்த திட்டம் மதுரைக்கு வரப்பிரசாதமாகும் .
அதேபோல ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்ட பணிகள், குடிமராமத் திட்டம்,
30 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், மதுரை ராஜபாளையம் அருகே நான்கு வழி சாலைகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் மதுரையின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.
ஆனால் இன்றைக்கு மதுரை மாநகராட்சி ஊழலால் தலை குனிந்து நிற்கிறது, இதே மதுரை மாநகராட்சிக்கு 2011 ஆம் ஆண்டில்
250 கோடி நிதியை அம்மா வழங்கினார்,அதிமுக ஆட்சியில் திட்டங்களால் மதுரை மாநகராட்சி சிங்கப்பூர் போல உருவாகி இருக்கும், தற்போது திமுக ஆட்சி எதையும் செய்யவில்லை இதெல்லாம் எடப்பாடியார் தோலுரித்து நிச்சயம் காண்பிப்பார் .
இன்றைக்கு அறிவாலயத்தில் இதுதான் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக வருவார் என்று உதயநிதியை முன்னிறுத்தி கூறி வருகிறார்கள், தமிழகத்தில் இது போன்ற ஆணவ பேச்சுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
குடும்ப ஆட்சி என்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாகும், ஜன ஜனநாயகத்தின் நம்பிக்கை உள்ளவர்கள் இது போல் சொல்ல மாட்டார்கள், 2026 தேர்தலில் எடப்பாடியார் முதலமைச்சராக கையெழுத்து இடுவார் இப்போது நாங்கள் உறுதியிட்டு கூறுகிறோம் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், நீதிபதி, அண்ணாதுரை, எஸ் எஸ் சரவணன், மாணிக்கம்,தவசி, கருப்பையா, மாநில நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், தனராஜன், ராஜேஷ் கண்ணா,
மாவட்ட கழக நிர்வாகிகள் எஸ் முருகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், வக்கீல் திருப்பதி,வில்லாபுரம் ராஜா, பா.குமார், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, கண்ணன், ரவிச்சந்திரன், அரியூர் ராதாகிருஷ்ணன், காளிதாஸ், பிச்சை ராஜன், செல்லம்பட்டி ராஜா ,நகரச் செயலாளர் பூமா ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சுதாகரன், சுமதி சாமிநாதன், விளாங்குடி திரவியம், பகுதி கழகச் செயலாளர்கள் கே வி கே கண்ணன், வக்கீல் தமிழ்ச்செல்வன், தளபதி மாரியப்பன் மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் சேதுராமன், தமிழழகன், சிங்கராஜ பாண்டியன், சரவண பாண்டி, மகேந்திர பாண்டி, சிவசக்தி, வக்கீல் துரைப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


