குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்
சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் பாராட்டு சான்றுகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் 60 க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ,மாணவியர்களுக்மூன்று பிரிவுகளின் கீழ் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு, தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராஜ்கமல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர். முன்னதாக சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


