in

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சுவாமி நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சுவாமி நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா

 

ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவாமி நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா மங்களாசாசன நிகழ்வில் நவதிருப்பதி பெருமாள்களை சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் 9ம் திருப்பதியும் குருவுக்கு அதிபதியுமாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும் தாயார்கள் ஆதிநாயகி, குருகூா்வல்லி ஆகியோரும் அருள்பாளிக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார்.

இதன்படி நம்மாழ்வார் அவதாரம் செய்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 தினங்கள் நடைபெறுகின்றது. அதேபோல் இந்த ஆண்டிற்கான கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஐந்தாம் திருவிழாவான இன்று நடைபெற்ற மங்களாசாசன நிகழ்வை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது.

காலை 11 மணியளவில் நவ திருப்பதி கோயில்களில் உள்ள ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தன், பெருங்குளம் மாயக்கூத்தன், தொலைவில்லிமங்கலம் செந்தாமரைக்கண்ணன், இரட்டை திருப்பதி தேவபிரான், தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் மற்றும் மதுரகவி ஆழ்வார் ஆகியோர் பூப்பந்தலில் எழுந்தருளினர்.

பெருமாள்கள் அனைவரையும் வரவேற்று சுவாமி நம்மாழ்வாரின் மங்களாசாசனம் நடைபெற்றது. இன்று நள்ளிரவில் ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான் உள்ளிட்ட நவ திருப்பதி சுவாமிகள், கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

வருகிற 8 ஆம் தேதி சிகர நிகழ்வான 9 ஆம் திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

What do you think?

ஆதாரத்தை காட்டிய கல்யாண் மாஸ்டர்… அடித்ததை ஒப்புக்கொண்ட  தினேஷ் மாஸ்டர்

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் 3-ம் நாள் – சேஷ வாகனம்