100 கிலோ எடை கொண்ட 3 அடி உயரமுள்ள நடராஜர், நந்தி திருவாச்சி சிலைகள் கண்டெடுப்பு
காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் போடும் போது சுமார் 100 கிலோ எடை கொண்ட 3 அடி உயரமுள்ள நடராஜர், நந்தி திருவாச்சி உள்ளிட்ட உலோகத்தால் ஆன சிலைகள் கண்டெடுப்பு:
போலிசார் விசாரணை ஜெசிபி இயந்திரங்களை கொண்டு அதிகாரிகள் முன்னிலையில் தேடும் பணி தீவிரம்..
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்து உள்ள கொல்லிமலை கீழ் பாதி என்ற கிராமத்தில் ஜெ.என்.நகரில் முகம்மது அப்சர் (35) என்பவர் புதிய வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடும் போது சுமார் 150 கிலோ எடையுள்ள 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, சிதாலமான திருவாச்சி,அஸ்தி தேவர்,1 அடி பிரதோஷ நந்தி வாகனம் உள்ளிட்ட உலோகங்கதால் ஆன சிலை கண்டெடுக்கப்பட்ட பட்டது.
இதனையடுத்து தகவலில் பேரில் அங்கு வந்த காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் சிலைகளை கைப்பற்றி ஐம்பொன் சிலையா என தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் போலிசார் பாதுகாப்புடன் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் போலிசார் பாதுகாப்புடன் ஜெசிபி இயந்திரங்களை கொண்டு வேறு சிலைகள் ஏதாவது பூமிக்கடியில் இருக்குமா என தோண்டும் பணியினை அதிகாரிகள் தீவிரப்படுத்தப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக இந்த இடமானது 1000 வருடங்கள் பழமையான சிவலோகநாதர் கோவில் பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரவி பொதுமக்கள் ஏராளமானோர் சிலைளை காண குமிந்து வருகின்றனர்.