in

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பு.

 

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது. மாவட்ட எல்லை திருவாலங்காடு காவேரி விக்ரமன் தலைப்பு மதகிற்கு வந்த காவிரி நீர் நொடிக்கு 782 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி ஆற்றிற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி திருச்சி கல்லணை வந்த காவிரி நீர் டெல்டா மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்டது.இந்த காவிரி நீரானது இன்று பிற்பகல் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கியில் தண்ணீர் வந்தடைந்தது.

விக்ரமன் தலைப்பு மதகிற்கு வந்த காவிரி நீரை பொதுப்பணித் துறையினர் சிறப்பு பூஜைகள் செய்து வினாடிக்கு 782 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும்.

இதன்படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What do you think?

லாரிகள் மூலம் டன் கணக்கில் அனுப்பும் உப்பு 

மேல்மலையனூர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை …