வாலாஜாபாத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு விழா
வாலாஜாபாத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக வெண்குடி டி.ராகுல் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா !!!!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் தமிழக வெற்றி கழகம் சார்பில் வாலாஜாபாத் மார்க்கெட் பேருந்து நிலையம் அருகே கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் N.ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி
காஞ்சி மாவட்ட கழகச் செயலாளர் எஸ் பி கே தென்னரசு வழிகாட்டுதலின்படி வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வெண்குடி டி.ராகுல் தலைமையில்
11,12 ,13,15 ஆகிய வாலாஜாபாத் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சாதிக்பாஷா , வெங்கடேசன், சரவணன், திவாகர், முகமத் அலி, தரணி பாபு, ராபர்ட் , சுக்கூர், அரவிந்த் ஆகியோர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய், தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார்கள்…
இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் ஜெகன் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகிகள் விஎஸ்ஜி.சத்யா, அருண் ராஜ் தியாகராஜன் நாகராஜ் சரவணன் கண்ணன் குமரேசன் அபி கோபிநாத் மிதுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…