ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை
கோகோயின் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, காவல்துறையின் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், இரு நடிகர்களின் சார்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் படி அவர் எந்த போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக கிருஷ்ணாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இதற்கிடையில், ஸ்ரீகாந்த் காவல்துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாகவும், எந்த போதைப்பொருளும் அவர் வைத்திருந்தது கண்டறியப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.
இருப்பினும், இரு நடிகர்களுக்கும் ஜாமீன் வழங்குவதை போலீசார் எதிர்த்தனர். இவர்களின், ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று மாலை அறிவிக்கிறது.


