சுவாமிமலையில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம்
சுவாமிமலையில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது.
கும்பகோணம் நீலாம்பாள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கோயில் தக்கார் சுவாமிநாதன், குருகுலம் கன்சல்டன்சி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிரிவலத்தில் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு நிறுவனர் கேசவராஜன், நிர்வாக அறங்காவலர் சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், ஆலோசகர் நடராஜன், கலைச்செல்வன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கும்பகோணம் நீலாம்பாள் குடும்பத்தினர் சார்பில் அமுது வழங்கப்பட்டது.


