திண்டிவனம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
திண்டிவனம் மூங்கில் அம்மன் கோயில் தெரு அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இரவு வீதி உலா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மூங்கில் அம்மன் கோயில் தெரு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரசு கங்கையம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன்யாக அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து முத்து பல்லக்கில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.