திருக்கார்த்திகை தீப திருவிழா-20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்…
கிரிவலம் முடிந்து தங்களது ஊருகளுக்கு செல்ல அலைபாய்ந்த பக்தர்கள். முண்டியடித்துக் கொண்டு இடம் பிடிக்க சென்ற பணிகள்…
திருவண்ணாமலைக்கு நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நேற்று நடைபெற்றது.
இந்த தீபத் திருவிழாவில் வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் என சுமார் 20 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக அண்ணாமலையாரை வணங்கி 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
பின்னர் இன்று காலையில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் திருப்பதி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
அப்போது விழுப்புரலிருந்து வேலூர் செல்லும் விரைவு ரயில் வந்தவுடன் அதில் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறினர்.
குறிப்பாக திருக்கார்த்திகை தீபத்திற்காக பொது மக்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சுமார் 16 சிறப்பு ரயில்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.


