கொல்லப்போகிறார்கள் கதறி அழுத சதா
டெல்லியில் ஆறு வயது குழந்தை தெரு நாய் கடித்ததால் உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள 10 லட்ச தெருநாய்களை பிடித்து கருத்தடை ஊசி போட்டு காப்பகங்களில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
இதனை நடிகையும் சமூக ஆர்வலருமான சதா கண்டித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் 6 வயது குழந்தை இறந்ததற்கு காரணம் Rabies அல்ல என்று நிரூபணம் ஆன பிறகும் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
10 லட்சம் நாய்களை அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாது அதனால் அவற்றை கொல்ல போகிறார்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு அவற்றை கட்டுப்படுத்தாதது அரசாங்கத்தின் தவறு அப்படி இருக்கும் பொழுது நாய்களை தண்டிப்பது சரியா.
என்னைப் போன்ற பலரும் சொந்த பணத்தை செலவு செய்து நாய்களை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறோம்.
வீட்டிற்கு அழகான நாய்க்குட்டி வேண்டும் என்று எங்கிருந்தோ காசு கொடுத்து நாய்களை வாங்கி வளர்க்கும் உங்களால் தான் இன்றைக்கு பல நாய்கள் தெருக்களில் திரிகிறது.
பரிதாபமாக அவை உயிரிடப்போகின்றது விலங்குகள் மீது அன்புள்ளவர்கள் என்று சொல்லக்கூட கேவலமாக இருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எப்படியாவது தடுக்க வேண்டும் இதற்காக போராட்டம் செய்ய வேண்டும் நாய்களை பராமரிக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும் என்று அழுது கொண்டே வீடியோவை வெளியிட்ட பிறகு ரசிகர்களும் மனம் பொறுக்காமல் ஆறுதல் சொல்லி வருகின்றனர் சதாவிற்கு……………….


