in

தேவராயன்பேட்டை ஸ்ரீ தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழா

தேவராயன்பேட்டை ஸ்ரீ தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழா

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டை ஸ்ரீ தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழா …

திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக் கடன்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள கோவில்தேவராயன் பேட்டை ஸ்ரீ தில்லையம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றங்கரையில்
இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் , முளைப்பாரி எடுத்து மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தில்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கோவில் தேவராயன்பேட்டை நாட்டாமைகள், கிராமவாசிகள் , திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

What do you think?

நிலத்தடி நீர் வரிவிதிப்பு பிரச்சனைக்கு முதலமைச்சர் நீதிமன்றத்தை நாடுவார் அமைச்சர் நேரு பேட்டி

ஆஷாட நவராத்திரி விழா 5 ஆம் நாள் தேங்காய்ப்பூ அலங்காரம்