உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா
உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் நிலையில் பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மற்றும் மின் அலங்காரம் செய்யும் பணிகள் துரிதம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக பிரசித்தி பெற்றதாகும் கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்றும் பசலிக்கா அந்தஸ்து பெற்றதுமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்கள் ஆண்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.
நடப்பாண்டுக்கான பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்க உள்ளது.
விழா நாட்கள் நடைபெறும் பத்து நாட்களும் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் மராத்தி கொங்கணி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி புனித சிலுவை பாதையும் ஏழாம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன பெரிய தேர் பவணியும் 8ம் தேதி மாதா பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு அன்று மாலை கொடி இறக்கம் செய்யப்பட உள்ளது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாரம் அமைத்து தொழிலாளர்கள் தீவிரமாக வர்ணம் பூசி வருகின்றனர்.

மேலும் பேராலயத்தை சுற்றிலும் மின் அலங்காரப் பணிகளும் நடைபெற்று வருகிறது மேலும் வரக்கூடிய லட்சக்கணக்கான யாத்திரிகர்களுக்கு தேவையான கழிவறை குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேராலய அதிபர் இருதயராஜ் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் செய்யப்பட்டு வருகிறது.

