ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள்
நம்பெருமாள் இன்று (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி;

அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி ; மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைரஅபய ஹஸ்தம் சாற்றி;
திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம்; அதன்மேல் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம்; மகரி ; கஜலட்சுமி பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்;
தங்க பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; மரகத கிளி பெரிய ஹாரம் மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து பின் சேவையாக – சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; புஜ கீர்த்தி அணிந்து சேவை சாதிக்கிறார்.



