ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
தஞ்சை நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் 108 திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு வழிப்பட்டனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை வென்னாற்றங்கரை அருள்மிகு நாயகி தாயார் சமேத ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 8ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை துவங்கியது.
இன்று நான்காம் கால பூஜையுடன் நிறைவு பெற்றது.
தொடர்ந்து கவசக் குடம் யாகசாலை மண்டபத்தில் இருந்து மங்கள வாத்யங்கள் இசையுடன் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியர்கள் எடுத்து வந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவித்தா என பக்தி கோஷமிட்டு நரசிம்ம பெருமாளை வழிப்பட்டனர்.


