நாமக்கல் அடுத்த பாண்டமங்கலம் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் லட்சார்சனை விழா துவக்கம்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சுவாமி லட்சார்ச்சனை பெருவிழா மிக விமர்ச்சையாக நடைபெற்றது.
இன்று காலை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் பின் வெள்ளி கவச அலங்காரமும் பிறகு லட்சார்சனை விழா துவங்கி நடைபெற்றது.
மேலும் நாளை மே. 8-ம் தேதி, மே – 9ந்தேதியும் காலை 8 மணிக்கு லட்சார்சனை துவங்கி 12 – மணி வரையும் பின் மஹா தீபம் மாலை 4 மணிக்கு லட்சார்சனை துவங்கி 7. மணிவரைக்கும் பிறகு தீபாரதனையும் மே.10ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம் பின் 12.00மணி முதல் 1.00 மணிவரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சிறப்பு திருமஞ்சனம் மஹா தீபாரதனையும் இரவு. 7.30 க்கு திருக்கோடி தீபம் ஏற்றுதல் நடைபெறுகின்றன.
விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வர் அருள் பெற அன்புடன் அழைக்கின்றனர் மேலும்விழவிற்வான ஏற்பாடுகளை அறங்காவலர் குழ மற்றும் கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.