in

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு தீர்த்தவாரி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு தீர்த்தவாரி

 

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர்.

இக்கோவிலில் அக்னி, சூரியன், சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தக் கரையில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.தீர்த்தவாரி பூஜைகளை ராமநாதன் குருக்கள் செய்து வைத்தார்.

What do you think?

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மண் அரிப்பு

பெரியகோட்டை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா