நாமக்கல் நகரத்தில் ராமநவமி விழவை முன்னிட்டு சீதா கல்யாண உற்றவ விழா
நாமக்கல்லில் ராமநவமி விழாவை முன்னிட்டு நாமக்கல்லில், ராமகிஷ்ண சபா சார்பில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் நேற்று துவங்கியது. காலை சுவாமி வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து ராமர் படத்துடன், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் நரசிம்ம சுவாமி கோயிலில் அமைந் துள்ள ராமர் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து முல்லை மஹாலில் முறைப்படி ஸ்ரீ ராமர் – சீதை திருக்கல் யாண வைபவம் திருமாங்கயதாரத்துடன்விமரிசையாக நடைபெற்றது.
இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மோகன் பாகவதர் தலை மையிலான பஜனை குழு ராமர் பக்தி பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில் ராமகிருஷ்ண மாருதி
கானா சபா உறுப்பினர்கள் நாராயணன், ஹரி தாஸ் குருராஜன், பிரகாஷ், பாலாஜி முத்து பாகவதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.