in

பழனியில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டிக் தொடங்கியது

பழனியில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டிக் தொடங்கியது

 

பழனியில் கந்தசஷ்டி திருவிழா காப்புகட்டுதலுடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு சஷ்டி விரதத்தை துவங்கினர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பழனி மலைக்கோவிலில் உச்சி காலபூஜை முடிந்தவுடன் மூலவருக்கு காப்பு கட்டப்பட்டது.

தொடர்ந்து விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வயானை, துவாரபாலகர்கள், வீரபாகு, நவவீரர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்களும் காப்பு கட்டி கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர். இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 6ம் நாள் திருவிழாவான வருகிற 27ம்தேதியும், 28ம் தேதி சண்முகர் வள்ளி-தெய்வயானை சமேதருக்கு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெறுகிறது.

அன்று கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. கந்த சஷ்டியை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர்.

கந்தசஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும் செய்து வருகின்றனர்.

What do you think?

எடப்பாடி பழனிச்சாமி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்கள்