in

கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் தேக்கம்

கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் தேக்கம்

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தந்தை மண்டல முதுநிலை மேலாளர் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல்முட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கமடைந்து உள்ளன.

இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மறு நடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

அரசு உடனடியாக தலையிட்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் 287 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து உள்ளன.

ஆனால் கடந்த 15 நாட்களாக எந்த கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யாமல் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து உள்ளன.

விவசாயிகள் கொள்முதல் நிலையம் வாசலிலும், சாலை ஓரங்களிலும் நெல்லை கொட்டி வைத்து இரவு பகலாக காத்து கிடக்கின்றனர்.

மடிகை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் மழையிலும், வெயிலிலும் நெல்லை போட்டு வைத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தன்னீர் திறக்கப்பட்டதால் கடன் வாங்கி நடவு செய்ததாக கூறிய விவசாயி துரைமுருகன்,

அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வந்து இருக்கிறேன்.

நெல் கொள்முதல் செய்யாமல் 10 நாட்களாக நெல் தேக்கம் அடைந்து உள்ளது.

மாலை நேரத்தில் தினமும் மழை வருகிறது.

காலை நேரத்தில் காய வைப்பதும். மாலை நேரத்தில் நனைவதுமாக உள்ளது.

இதன் காரணமாக ஈரப்பதம் அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம்.

டெல்டாவில் மழை பெய்வது தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆனால் விவசாயிகள் கஷ்டப்படுவது அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.

விளைவித்த நெல்லை விற்க முடியவில்லை வாங்கிய கடனை கட்ட முடியல. பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியல. மறு நடவு செய்ய வழி இல்லாமல் உள்ளோம்.

நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மடிகை, துறையூர், துறையுண்டார் கோட்டை, காசாநாடு புதுர், சூரக்கோட்டை காட்டூர். வாண்டையார் இருப்பு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நெல் கொண்டு வரப்படுகிறது.

நெல் கொட்டி வைக்க இடம் இல்லை. மழை வந்தால் நெல்லை பாதுகாக்க தார்பாய் இல்லை. என குற்றம் சாட்டினார்.

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிடல் இல்லாத காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் அடைந்துள்ளன.

தேவைக்கேற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் இருந்தும் நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருட சேவை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஐந்து கருட சேவை