இராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் பிறப்பை முன்னிட்டு கோ பூஜை
அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் ( கன்னியா மாதம் ) பிறப்பை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்று ஸ்ரீ அழகிய மன்னார் இராஜகோபாலசுவாமி திருக்கோவில். இத் திருக்கோவிலில்ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
புரட்டாசி மாதம் இன்று பிறக்கின்றது. புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் ‘கன்னி’ ராசியில் பெயர்ச்சியாகி தென்திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறாா். தென்திசை என்பது ‘எமதர்மன்’ இருக்கும் திசையாகும். இம் மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
சிறப்புகள் பலஉள்ள புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. இதற்காக அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தாிசனம் நடைபெற்றது.
தொடா்ந்து மூலஸ்தானத்தின் முன் அமைந்துள்ள கருடன் சன்னதி முன்பு கோபூஜை நடைபெற்றது. பசுவுக்கும் கன்றுக்கும் புது வஸ்திரம் அணிவித்து ஸ்ரீசுக்தம் சொல்லி பூக்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்யப்பட்டது.

பின்னா் பால் நைவேத்யம் செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கோ பூஜை முடிந்ததம் பக்தா்கள் கோமாதாவை வலம் வந்து வணங்கி பசுக்களுக்கு பழங்கள், கீரைகள் வழங்கி வழிபட்டனா்.
பின்னா் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


