in

பெண்ணாடத்தில் பிரளய காலேஸ்வரர் கோவில் விநாயகர் தேர் 

பெண்ணாடத்தில் பிரளய காலேஸ்வரர் கோவில் விநாயகர் தேர்

கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற பிரளயகாலேஸ்வரர் உடனுறை அழகிய காதலி அம்மன் ஆமோதன அம்பாள் சிவன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் தேர், விநாயகர் தேர் இரண்டும் சேர்ந்தமடைந்து தேர் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.

   

இதை அடுத்து தேர் இரண்டையும் சீரமைத்து தரக்கோரி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தேர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று விநாயகர் தேர் வண்ண மலர்களால்    அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது.

தேரானது 4 மாட வீதிகள் வழியாக சென்று தேரடிக்கு வந்து நின்றது. இந்தத் தேரை பக்தர்கள் ஆரவாரத்துடன் இழுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

அச்சிறுப்பாக்கம் அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

அங்கன்வாடி பணியாளர்களுக்கு இடையில் நடந்த மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி