விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது
கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை புதிய மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில செயலாளர்
அ.உ வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குணவழகன், பரசு முருகையன், தாமரைச்செல்வன்,புஷ்பலதா
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் அண்மையில் புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்ட பொறுப்பாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். மேலும் கூட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை முகாம் அமத்தல், நிர்வாகிகள் கட்டமைப்பு, மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


