in

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ 4 கோடிக்கு ஆடுகள்  விற்பணை அமோகம்…

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ 4 கோடிக்கு ஆடுகள்  விற்பணை அமோகம்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை  தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் மற்றும் தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள் என்பதால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தையான இன்று அதிகாலை 2 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர்.

மேலும் விற்பனைக்காக சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக நாளை  7-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனால் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 4 கோடிகளுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்….

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருத்தேரோட்டத்திற்கு முகூர்த்த கால் நடப்பட்டது

அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா