in

48 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிய ஊழியர்கள், ஒரு வருட தேர்தலுக்குப் பின் கைது.

48 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிய ஊழியர்கள், ஒரு வருட தேர்தலுக்குப் பின் கைது.

 

அடுக்குமாடி குடியிருப்பு வாங்க 48 லட்சம் வைத்திருந்த பைனான்சியர். திருடிக் கொண்டு தப்பிய நான்கு ஊழியர்கள். பணத்தை திருடி சென்ற இரண்டு ஊழியர்கள் கைது, ஒரு வருட தேர்தலுக்குப் பின் பிடித்த போலீஸ்.

சென்னை போரூர் ஆபிஸர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் நெல்சன் தேவகுமார் (28) என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் செல்வ பீட்டர், ரகுபதி, குரு மற்றும் சத்தியகுமார் ஆகிய நான்கு பேர் பணிபுரிந்துள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் செய்ய திட்டமிட்ட நெல்சன், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க நினைத்தார். அதற்காக 48 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வைத்திருந்தார். அந்த பணத்துடன் பைனான்ஸ் பணம் 20,000 ரூபாய் சேர்த்து இருந்துள்ளது. இந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊழியர்கள் நான்கு பேரும் மாயமாகிவிட்டனர்.

இது தொடர்பாக 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி போரூர் காவல் நிலையத்தில் நெல்சன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பீட்டர் மற்றும் ரகுபதி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

போரூர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் பணத்தை பையுடன் திருடி சென்றதை உறுதி செய்த பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள குரு மற்றும் சத்தியகுமார் ஆகிய இரண்டு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

What do you think?

நடிகர் கிருஷ்ணா கைது; கண்காணிப்பு வளையத்தில் சிக்கிய இரண்டு நடிகைகள்

அயலி சீரியலில் entry கொடுக்கும் பிரபல நடிகர்