சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்
கோயம்பேடு பகுதியில் உள்ள தனியா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் 153 வது அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அதன்படி மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது, கேங் மேன்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு அளிப்பது, விடுபட்ட கேங் மேன் பணியாளர்கள் 5000 பேரை பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட பின்னரும் அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அகிலன் என்பவர் உட்பட மூன்று பேர் மயக்கம் அடைந்தனர்.
அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மயக்கம் தெரியாத அகிலன் மட்டும் ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோயம்பேடு பகுதியில் உள்ள தனியா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் 153 வது அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் அதன்படி மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
அத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது, கேங் மேன்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு அளிப்பது, விடுபட்ட கேங் மேன் பணியாளர்கள் 5000 பேரை பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்


