சண்டை கலைஞர் உயிரிழந் தொடர்பானதது வழக்கில் இயக்குனர் பா ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் ஆஜர்
நாகை அருகே விழுந்தமாவடி பகுதியில் நடந்த வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பின் போது விபத்தில் சண்டை கலைஞர் உயிரிழந் தொடர்பானதது வழக்கில் திரைப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் ஆஜர்;
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக கீழையூர் போலீசார் நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட விழுந்தமாவடி அலம் பகுதியில் . பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15ஆம் தேதி காலை படத்தின் முக்கிய கட்சியான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது அப்போது கார் ஒன்று வேகமாக ஓடி மேலே பறந்து கீழே விழும் காட்சி எடுக்கப்பட்டது அந்த காட்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் காருடன் மேலே பறந்து கீழே விழும்போது கட்டுப்பாட்டை இழந்து கார் விழுந்ததில் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக கீழையூர் போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவரின் ஆலோசனை மற்றும் சம்பவ இடசாட்சிகளின் அடிப்படையில் வழக்கானது மூன்று பிரிவுகளின் கீழ் மாற்றப்பட்டது.
இதன்படி திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா ரஞ்சித் சண்டை கலைஞர் வினோத் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல் வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகிய நான்கு பேர் சேர்க்கப்பட்டனர்.
இதில் மூன்று பேருக்கு ஏற்கனவே ஜாமின் வழங்கப்பட்டு விட்ட நிலையில் இன்று கீழ்வேளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் & தயாரிப்பாளர் பா. ரஞ்சித், ஆஜர் ஆனார் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


