தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்
4-ம் நாள் ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில்
ஹனுமந்த வாகனம் புறப்பாடு நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம் 4-ம் நாளை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளுக்கு மகாதீபாரதனை நட்சத்திர தீபம் கும்ப தீபம் சத்திரங்கள் கொண்டு சோட ச உபச்சாரம் மற்றும் பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து சிறிய திருவடியான அனுமந்த வாகனத்தில் பத்ர்களுக்கு காட்சியளித்தார். மேலும் ஹனுமந்த வாகனத்தில் காட்சியளித்த ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் அவர்களுக்கு பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரவு வீதி உலா நடைபெற்றது. இப் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகின்ற சனிக்கிழமை அன்று மாலையும் மற்றும் திருத்தேரோட்டம் 09-06-2025 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.