சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் கட்டுப்பாட்டை நீக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அமெரிக்க இஸ்ரேலின் இன வெறி போரில் அப்பாவி மக்கள் இறையாவதை கண்டித்தும் உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் .
தட்டுப்பாடு இல்லாமல் எரிவாயு கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நாகை புதிய பேருந்து நிலையத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் தலைமையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் சிலிண்டரை சுற்றி கும்பிஅடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய பாடல்களை பாடி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் . எரிவாயு எந்தெந்த நாடுகளில் கிடைக்கிறதோ அங்கிருந்து உடனடியாக இறக்குமதி செய்து எரிவாயு தட்டுப்பாட்டை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேஸ் தட்டுப்பாடு இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும் கர்நாடகாவில் ஒரு கேஸ் சிலிண்டர் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார்

