in

சிதம்பரம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து விபத்து

சிதம்பரம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து விபத்து

 

சிதம்பரம் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த பேருந்து விபத்து 18 பேர் சிறுசிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி, வெள்ளாறு பாலத்தில் மோதி தடுப்புக்கட்டையில் அந்தரத்தில் தொங்கிய பேருந்து.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கண்ணனூர் கிராமத்திலிருந்து கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு குருசாமி வெங்கடேஷ் என்பவர் தலைமையில் 39 ஆண்கள் மற்றும் 1 பெண் ஐயப்ப பக்தர்கள் மொத்தம் 40 பேர் நேற்று இரவு கிளம்பி விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே முட்லூர் வெள்ளாறு பகுதியில் அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் பேருந்தை ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வெள்ளாறு பாலத்தின் இடதுபுறத்தில் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

இதில் பயணம் செய்த 18 பேர் லேசான காயங்களுடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வெள்ளாறு பக்கவாட்டு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது, நிற்காவிட்டால் ஆற்றில் விழுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் இதில் ஐயப்பா பக்தர்கள் மற்றும் ஓட்டுநர் கிளீனர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் சரி செய்தனர் மேலும் பரங்கிப்பேட்டை தீயணைப்பு துறையினர் பாலத்தின் மீது அந்தரத்தில் நின்ற பேருந்தை இரண்டு கிரான் மூலம் வாகனத்தை அகற்றினர் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை விட்டாரா அல்லது வாகனத்தில் ஸ்டேரிங் கட்டானதால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

What do you think?

மழை விட்டும் வடியாத மழை நீரால் விவசாயிகள் வேதனை

திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா