பெங்களூரு பப்பில் சர்ச்சைக்குரிய சைகை காட்டிய ஆர்யன் கான்
பெங்களூர்ல அசோக்நகர் போலீஸ் ஏரியாவுக்குள்ள இருக்கிற பிரிகேட் ரோட்டுல, புதுசா ஒரு பப் (கேளிக்கை விடுதி) ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க.
அந்தப் பப்போட திறப்பு விழா போன மாசம் (நவம்பர்) 28-ம் தேதி நடந்துச்சு. அதுல, பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கானோட மகன் ஆர்யன் கான் கலந்துக்கிட்டாரு.
அவரைப் பார்க்கிறதுக்காக பிரிகேட் ரோட்டுல நிறைய ரசிகர்கள் கூட்டம் கூடி இருந்தாங்க.
அதுல இளம் பெண்களும் இருந்தாங்க. இந்த நேரத்துல, அந்தப் பப் முன்னாடி கூடி இருந்த தன்னோட ரசிகர்களைப் பார்த்து ஆர்யன் கான் கை அசைச்சிருக்காரு.
அப்போ, ஆர்யன் கான் தன்னோட ரசிகர்களைப் பார்த்து அநாகரிகமான சைகை காட்டியதா இப்போ ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கு.


